Wednesday, August 20, 2008

இணைய இதழ் வாசகர்கள் யார்? சந்திப்பு: -கவின்மலர் (நன்றி : தீக்கதிர்)

(www.keetru.com இணைய இதழ்மூலம் ஏராளமான இதழ்களை இணைய வாசகர்களிடம் கொண்டு சேர்த்து வரும் ரமேஷ், பாஸ்கர் ஆகியோரிடம் இணையதள வாசிப்புபற்றி சில கேள்விகளும், அவர்களின் பதில்களும்...)

இணைய இதழ்களின் வாசகர்களுக்கும் அச்சுப் பத்திரிகைகளின் வாசகர் களுக்கும் என்ன வேறு பாடு?

இணைய வாசகர்கள் தங்களது அலுவலக வேலைகளுக்கிடையே அல்லது ஓய்வு நேரத்தில் வெளி உலகில் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள இணைய இதழ்கள் பக்கம் எட்டிப் பார்ப்பவர்கள்.ஆனால், அச்சுப் பத்தி ரிகைகளின் வாசகர்கள், வாசிப்பதை ஓர் இயக்க மாகக் கொண்டவர்கள். வாசிப்பதை அவர்கள் விவாதிப்பார்கள். தங்கள் கொள்கைகளுக்கு எதிரான கருத்துக்களைக் கண்டித்து கூட்டம் நடத்துவார்கள். சிலர் புத்தகங்களை எரித்து போராட்டம் கூட நடத்துவார்கள்.

இணைய இதழ்களின் வாசகர்கள் பெரும்பாலும் புலம் பெயர்ந்த தமிழர் களாகவே உள்ளதாகத் தெரிகிறது. இது ஏன்?

புலம் பெயர்ந்த தமிழர் களுக்கு இயற்கையாகவே நமது மண்ணின், மொழி யின் தொடர்பு அறுந்து விடாமல் பாதுகாக்க வேண்டிய அக்க றையும், ஆர்வமும் இருக் கிறது. அவர்களுக்கு இணைய இதழ்களின் மூலமே தங்க ளது தாய் மண்ணைப் பற்றி அறிந்து கொள்ள முடிகிறது. கீற்று தளத்தை எடுத்துக் கொண்டால் ஐம்பது விழுக் காடு வாசகர்கள் இந்தியா விலும், ஐம்பது விழுக்காடு வாசகர்கள் வெளிநாடுக ளிலும் இருக்கிறார்கள். ஆனாலும் கூட எங்களுக்கு வரும் எதிர்வினைகளை எடுத்துப் பார்த்தால் அவை களில் பெரும் பகுதி வெளி நாடு வாழ் தமிழர்களிடம் இருந்து வருவதாகத்தான் இருக்கிறது.

ஒரு அச்சுப் பத்திரிகை யின் பதிப்பாளருக்கு பத்திரிகை எவ்வளவு விற் கிறது என்ற புள்ளி விவரம் தெரியும். ஆனால் இணைய இதழ்களில் இந்தக் கணக்கு எப்படி எடுக்கப்படுகிறது?

அச்சு இதழ்களை எத்தனை பேர் படிக்கிறார்கள் என்று கணக்கு போடுவது தோராயமாகத்தான். 3000 பிரதிகள் விற்கிறது என்றால் 3000 x 5= 15,000 பேர் படிப்ப தாகத் தான் கணக்கு போடுவார் கள். இந்த 5 என்பது ஒரு பத் திரிகையை ஒருவர் வாங்கி னால் அதை 5பேராவது வாசிப் பார்கள் என்ற கணிப்பின் அடிப்படை யில் கூறப்படுவது. ஆனால், இணைய இதழ்களைப் பொறுத் தவரை எத்தனை பேர் படிக்கி றார்கள் என்பதை மிகத் துல்லியமாக கணக்கிட்டு சொல்லும் வகையில் தொழில்நுட்பம் இருக் கிறது.உதாரணமாக கீற்று இணை யதளத்தை 79 நாடுகளில் வாசிக்கிறார்கள் என்ற விவரம் எங்களுக்குத் தெரியும். அது மட்டுமல்ல, எவ்வளவு நேரம் இணை யத்தில் இருந்தார்கள், எத்தனை பக்கங்கள் வாசித் தார்கள், எத்தனைபேர் மீண்டும் மீண்டும் இணைய தளத்திற்கு வருகிறார்கள். ஒரு குறிப்பிட்ட பக்கத்தை எத்தனை பேர் வாசித்தார்கள், எந்தப் பக்கத்தை வாசகர்கள் அதிகம் விரும்பி படிக்கிறார்கள். இந்தியாவில் இருந்து எத்தனை பேர், அமெரிக்காவில் இருந்து எத்தனைபேர், எந்த சர்வீஸ் ப்ரோவைடரில் (பிஎஸ்என் எல், ஏர்டெல் போன்றவை) இருந்து எத்தனை பேர் போன்ற துல்லியமான புள்ளி விவரங்களை இணைய இதழ் நடத்து பவர்களால் பெற முடி யும். இவ்வளவு ஏன்? தென் அமெரிக்காவில் உள்ள ஈகுவேடார் நாட்டில் கீற்றுக்கு ஒரு வாசகர் இருக் கிறார் என்ற விவரம் கூட எங்களுக்குத் தெரியும். அங்கே இருக்கும் தமிழர்களில் இவர் மட்டுமே அரசியல் இலக்கியத்தில் ஆர்வ முள்ளவராக இருக்க லாம்.

அதேநேரத்தில், சாரு நிவேதிதா போன்றவர்கள் தங்களது வலைத்தளத்தை ஐந்த ரை லட்சம் பேர் படிக் கிறார்கள் என்று சரடு விடுவதையும் எளி தில் கண்டு பிடித்து விட லாம்.`network traffic-ஐ அறிய உதவும் `Third party' இணைய தளங்கள் மூலம் ஒரு இணைய இதழை எத்தனை பேர் படிக் கிறார்கள் என்பதை தோராய மாக கணக்கிட முடியும்.

பொதுவாக இணைய இதழ்களின் வாசகர்கள் எப் படிப்பட்டவர்கள்? எந்த நிலைப்பாட்டில் உள்ளவர் கள்? இணையம் ஆர்.எஸ். எஸ். காரர்கள் கையில் இருக் கிறது என்று ஒரு கருத்து நில வுவது உண்மைதானா?

முன்னர் அப்படி ஒரு நிலை இருந்தது உண்மை தான். இப் போது மாற்றுச் சிந்தனை உடை யவர்களும் இணையத்தில் அதிகரித்து விட்டார்கள். முன் னர் பெரி யாரியத்தையும், மார்க் சியத்தையும் அவர்களால் மிக எளிதாக விமர்சித்து விட்டுப் போக முடிந்தது. இப்போது எழுதினால், மிகக் கடுமையான எதிர்வினைகளை எதிர்கொள்ள வேண்டி வரும். கீற்று தொடங் கப்பட்டபோது, பார்ப்பனியத் தை விமர்சிக்கும் கட்டுரை களை வெளியிட்டால், ஆதர வாக ஓரிரு மின்னஞ்சல்கள் மட்டுமே வரும். எதிராக நிறைய வரும். இப்போது சரிக்குச் சரியாக இருக்கிறது.

இணைய இதழ்க ளுக்கு விளம்பரங்கள் பெறுவதில் சிக்கல்கள் உள்ளனவா?

அது நீங்கள் என்ன நிலைப் பாட்டுடன் இணை யத்தை நடத்துறீர்கள் என் பதைப் பொறுத்தது. விளம் பரங்களுடன் இலாபகரமான இணையங்களும் இருக்கின்றன. தானாக முன்வந்து யாரும் விளம்பரம் தந்ததில்லை. அர சியல் நிலைப்பாடு காரண மாக விளம்பரங்களை அளிப் பதற்கு தயங்குகிறார்களோ என்னவோ? என்ன இருந் தாலும் தினமலருக்கு கிடைக் கும் விளம்பரங்கள் தீக்கதிருக்குக் கிடைக்காது தானே?

Thursday, August 07, 2008

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்தும் “கந்தர்வன் நினைவு சிறுகதைப் போட்டி--2008”

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம கடந்த ஆண்டு நடத்தியது போலவே இந்தஆண்டும் கந்தர்வன் நினைவுச் சிறுகதைப் போட்டியை நடத்திடத் திட்டமிட்டுள்ளது.

முதல் பரிசு ரூ.5,000
இரண்டாம் பரிசு ரூ.3,000
மூன்றாம் பரிசு : ரூ.2,000

மற்றும் தேர்வுபெறும் சிறந்த சிறுகதை ஒவ்வொன்றிற்கும் ரூ.250 பரிசளிக்கப் படுவதோடு, கதைகள் சிறந்த இலக்கிய இதழ்களில் வெளியிடப்படும்.இந்த ஆண்டு பரிசுத்தொகையை,பிரபல திரைக்கவிஞர் நா.முத்துக்குமார் வழங்குகிறார்.

விதிமுறைகள்:

ஒருவரே எத்தனை கதைகளை வேண்டுமானாலும் அனுப்பலாம்.பக்க அளவும், கதைக் கரு தேர்வும் எழுத்தாளர் சுதந்திரம். கதை, தனது சொந்தக் கற்பனையே என்றும் வெளிவராதது என்றும் உறுதிதந்து, பெயரைத் தனித்தாளில் முகவரி, தொலைபேசி எண்ணுடன் தரவேண்டும். (கதைப் பக்கங்களில் எழுதியவர் பெயர் முகவரி இருக்கக் கூடாது)

வெளிநாடுகளில் இருப்போர் மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு, கதைகளை அனுப்பலாம்.

சிறுகதைகள் வந்துசேரவேண்டிய கடைசி நாள் : 11-09-2008
சிறுகதைகளை அனுப்ப வேண்டிய முகவரி:
----------------------------------------------------------------------
நா.முத்து நிலவன்,
(துணைப் பொதுச்செயலர் -தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்)
96, சீனிவாச நகர் 3ஆம் தெரு,
புதுக்கோட்டை – 622 004
செல்பேசி : 94431-93293
மின்னஞ்சல் : naamuthunilavan@yahoo.co.in