Tuesday, April 08, 2014

மற்றவை

(புதுதில்லியில் வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த நிடோ கொல்லப்பட்டபோது எழுதப்பட்ட கவிதை இது)

The other
-Easterine Kaire, Nagaland

என் கால்களால் நடந்து பார்
ஒரு வாரம், ஒரு நாள், ஒரு சில மணிகள்
அந்நொடிகள் நீண்டவையென உணர்வாய்.
தோலை எரிக்கும் முறைத்த பார்வைகளை
உணர்வாய் உன் பின்னால்.
கேலியும் புறம்பேச்சுகளும்
இருளாய் உன்மீது கவிழும்
துர்செய்தி தாங்கிவரும் பறவைபோல்.

நேற்று கொன்றனர்
ஓர் இளைஞனை
வித்தியாசமாய் தென்பட்டதால்.
அவன் என்போன்ற
தோற்றம் கொண்டிருந்தவன் அல்லவா?

என் கால்களால்
நடந்து பார்த்து உணர்
அவனையொத்த தோலுடன் இருப்பதும்
அவனையொத்த விழிகளுடன் பார்ப்பதும்
எப்படி உள்ளதென உணர்வாய்

என் கால்களால் நடந்து பார்
ஒரு வாரம், ஒரு நாள், ஒரு சில மணிகள்
உணர்..அனுபவித்துப் பார்
அந்த அச்சம், அந்த நடுக்கம்,
அந்தப் பீதி
இவ்வாறுதானிருக்கும் மற்றவையாக இருப்பது

(தமிழில் : கவின் மலர்)
(நன்றி : இந்தியா டுடே)

No comments:

Post a Comment